நான் பதிவுலகத்துக்கு 2009 ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வந்து விட்டேன். அப்போது நான் எழுதும் கவிதைகளை மட்டுமே பதிவில் இட நினைத்து பதிவிட்டும் வந்தேன்.இதயத்தின்ஓசை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த பெயரை வைக்குமாறு கூறியது முகப்புத்தக நட்பு ஒருவர். முற்றிலும் காதல் தொடர்பாகவே எழுதி வந்தேன். கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முகப்புத்தகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கருத்துரைகளும் அதிகமாக இருந்தது. இருப்பினும் நான் பொது விடயங்கள் சம்பந்தமாக எழுதுவது உண்டு. ஆனால் பதிவிடுவது இல்லை. சிலர் கேட்டுக்கொண்டதன் பேரில், அதன் பின் 2010 இன் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது தான் ஒரு மனிதனின் கவிதைகள் என்னும் வலைப்பதிவு.
அதன் பின்னர் கவிதைகளோடு மட்டும் நின்று விடாமல், விரும்பியதை எழுதநினைத்தேன். அதன் அடிப்படையில் 1-1-11 இல் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த "உயிர்த்தமிழ்"
எண்ண அலைகளின் ஓட்டத்தில்நான் யாரோ ஒருவன்...காதல் கொண்ட இதயங்களுக்குநான் தமிழ் நிலா...எலோருக்கும் நான்செந்தூரப் பாடகன்...எனக்கு மட்டும் தான் .விடை தெரியா கேள்வி....
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா