இந்த வாழ்கை எப்படி ஆரம்பித்தது என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எப்படி முடியப்போகின்றது என்றும் தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை. ஆக எமக்கு கிடைத்த வாழ்க்கையை வாழ்வதற்கும் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
இன்னல் தீர்க்கும் இறைவனின் பகுதிகளில் பல கதைகள் நடக்கலாம், வழமையாக நங்கள் வல்லிபுர கோவிலுக்கு ஞாயிறுகளில் செல்வதுண்டு, பொதுவாக கோவிலுக்கு செல்லும் போது எனக்கோ அல்லது உங்களுக்கோ ஒவ்வொரு சிறிய நிகழ்வுகளும் எதாவது தாக்கத்தை உண்டு பண்ணலாம், அப்படித்தான் அண்மையில் சென்றபோதும், ஒரு நிகழ்வு எம் எண்ணத்தில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ணி இருந்தது.
ஒரு பள்ளிக்கு செல்லும் சிறுவன் எங்களிடத்தில் இரந்துகொண்டிருந்தான், உணவு என்பது ஒரு உணர்ச்சி நிலை சொல், அதை ஆயுதமாக்கினால் விளைவுகள் சிறப்பாகத்தான் இருக்கும், அந்த சிறுவனும் சாப்பிடவில்லை பசி என்று தான் அறிமுகப் படுத்திக்கொண்டான், நாமும் அவனுக்கு பேச்சுக்கொடுத்தவாறு பல விடயங்கள் அறிந்துகொண்டோம், தாய் தந்தையரின் வற்புறுத்தலினால் தான் தாங்கள் இவ்வாறு கை ஏந்துவதாக சொன்னான்,
இந்த வளரும் குழந்தைகளின் நிலை இப்படித்தான் பல கோவில்களில் கேள்விக்குறி ஆகின்றது. சிலர் உண்மையில் வறியவர்கள் தான், அவர்களுக்கும் தேவைகள் இருக்கலாம், எனவே அவர்களுக்கு காசு வழங்குவதை விடுத்து எதிர்காலம் சிறக்க எதாவது செய்ய வேண்டும் என்ற வேடுகோளினை உங்கள் முன் வைத்து, எமது இந்த படைப்பினையும் இன்று வெளியிடுகின்றோம்,
எஸ்.ஏ.நிலான் இயகத்தில், பத்மயனின் இசையில், எனது வரிகளில், பாடகர் விருஷனின் குரலில் உருவாக்கப்பட்ட இந்தப்பாடலை, புதுவருடத்தை முன்னிட்டு காணொளி ஆகவும் , MP3 வடிவிலும் வெளியிட்டு வைக்கிறோம். இதில் எம்மோடு தர்சன், மற்றும் சிறுவனாக மதுசன் தங்கள் திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இப்பாடலுக்கான வீடியோ காட்சியினை திரைகளில் பார்ப்பதற்கு
எமது படைப்பினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, கருத்துக்களை வழங்குங்கள்.
- தமிழ்நிலா -
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்